போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
தமிழ்நாட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ அனுமதி அளிக்க வேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2015 ஜனவரி 9-ஆம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டபூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால், இனிமேல் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளில் இருந்தும் மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு விலக்கு அளித்துள்ளது.
















