“90% நெகட்டிவ் விமர்சனங்கள் திட்டமிட்டதுதான்!” – இயக்குனர் பிரேம் குமாரின் குற்றச்சாட்டு

“மெய்யழகன்” திரைப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார், சமீபத்தில் நடைபெற்ற இந்தியன் ஸ்க்ரீன் ரைட்டர்ஸ் கான்பிரன்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழ் சினிமாவில் நாடுக்குநாடாக அதிகரித்து வரும் எதிர்மறை விமர்சனங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரேம் குமார் கூறியதாவது:

“நேர்மையான விமர்சனங்களை பாராட்டுகிறேன். ஆனால் இன்று, 90% விமர்சனங்கள் திட்டமிட்டு, பணம் பெற்றுக் கொண்டு எழுதப்படுகின்றன. தமிழ் சினிமா மிகவும் மோசமான நிலையை சந்தித்து வருகிறது.”

அவரது “மெய்யழகன்” திரைப்படம் ரிலீஸான போது, நேர்மையான பாராட்டுகளை தாண்டி, ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஓடிடி மூலம் படம் வெளிவந்தபோது, மக்கள் தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தி, ஆரம்பத்தில் வந்த விமர்சனங்கள் மீது கேள்வி எழுப்பினர்.

படத்தின் வசூலை குறிவைக்கும் திட்டமிடல்:

படம் வெளியான முதல் வாரத்தில் வசூலை பாதிக்கவே, திட்டமிட்டு சிலர் எதிர்மறை விமர்சனங்களை பரப்புகிறார்கள் என்றும் பிரேம் குமார் குற்றம்சாட்டினார்.

“அந்த ரிவ்யூஸால் வசூல் பாதிக்கப்பட்டால், அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர்கள் அவர்களையே தேடுவார்கள் என்ற நோக்கத்துடன் செயலில் இறங்குகிறார்கள்,” என்றார்.

சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் விமர்சனங்கள் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது “கங்குவா” படத்தின்போது பாரிய விவாதமாக மாறி, நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version