புதூர் நாடு மலையில் கள்ளச்சாராம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 50 லிட்டர் சாராய ஊரல்களை அளித்த போலீசார்!. இரண்டு லிட்டர் சாராயம் பறிமுதல் ஒருவர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அக்க்ஷய் அனில் வாகரேக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் திருப்பத்தூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, கீழூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கீழூர் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சொக்கன் (50) என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் சோதனையின் போது
சாராயம் காய்ச்சுவதற்கு வைத்திருந்த இரண்டு பிளாஸ்டிக் ட்ரம்மில் வைத்திருந்த 50 லிட்டர் சாராய ஊரல்களை போலீசார் அளித்தனர். மேலும் அவரிடமிருந்து 2 லிட்டர் சாராயமும் கைப்பற்றினர்.
பின்னர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு சொக்கனை அழைத்து வந்து வழக்குப்பதிந்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
