விழுப்புரத்தில் தனியார் பள்ளியின் V.R.P பள்ளியின் 31-ம் ஆண்டு விழா

விழுப்புரத்தில் தனியார் பள்ளியின் வி.ஆர்.பி. பள்ளியின்
31-ம் ஆண்டு விழா நடைபெற்றது

விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியின் (தனியார்) பள்ளியின் 31-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சோழன் தலைமை தாங்கினார். ஆடிட்டர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கந்தசாமி அனைவரையும் வரவேற்றார். அரசு வக்கீல் நாகராஜன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, தேர்வில் ஒவ்வொரு வகுப்பிலும் முதலிடத்தை பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில் தாசில்தார் வேல்முருகன், நகரமன்ற கவுன்சிலர் கோதண்டராமன், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் அன்பு, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பிருதிவிராஜ், மழலையர் பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, வக்கீல் மனோ, நிர்வாகிகள் இருவேல்பட்டு குமார், மோகன், செல்வம் மற்றும் பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Exit mobile version