கன்னியாகுமரி மாவட்டத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 10 நாட்கள் தைப் பெருந் – திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான 9 ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று நடைபெற்றது குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர் –
கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னர்கள் காலம் தோற்று பாரம்பரியமிக்க கோவிலான அருள்மிகு நாகர்கோவில் நாகராஜர் கோவிலில் தைப் பெருந் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு சமய சொற்பொழிவு நாட்டிய அஞ்சலி இசை கச்சேரி போன்ற நிகழ்ச்சியில் நடைபெற்றன ஒவ்வொரு நாள் இரவிலும் சாமி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது மூலவர் நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகத்துக்கு பின்னர் சாமி பல்லாக்கில் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் பின்னர் தேரோட்டம் நடைபெற்றது குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர் இன்று இரவு சப்தாபரணம் நிகழ்ச்சியும் நாளை பத்தாம் நாள் திருவிழாவான சாமிக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரவில் ஆராட்டு நிகழ்ச்சியோடு பத்து நாள் தைப் பெருந் திருவிழா நிறைவுறும் –

















