மயிலாடுதுறை அருகே நீடூரில் நேற்று மர்மநபரால் இளைஞரை பட்டாகத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது

மயிலாடுதுறை அருகே நீடூரில் நேற்று மர்மநபரால் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்த நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யகோரி ஜமாத்தார்கள் சார்பில் இரவு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல். சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு:-

மயிலாடுதுறை தாலுகா நீடூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஹாலிக்(36). இவர் நேற்று மதியம் நீடூரில் மரத்தடியில் அமர்ந்து நண்பர்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்மன் நபர்கள் இருவரில் ஒருவர் பட்டாகத்தியால் முகமது ஹாலிக்கை சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பிச் சென்றனர்.

பட்டாகத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. அந்தக் காட்சிகளைக் கொண்டு போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகள் பிடிக்கப்படாததை கண்டித்து நீடூர் ஜமாத்தார்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக கூறப்பட்ட நிலையில் மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இரவுக்குள் பிடித்து விடுவதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீடூர் ஜமாத்தார்கள் இரவு 7 மணிக்குள் குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் நீடூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் நீடூர் கடைவீதியில் பத்துக்கு மேற்பட்டோர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்தனர். இதனால் அப்பகுதியில் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பெயரில் 7 தனி படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version