எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேஜஸ், மன்னை, குருவாயூர் உள்ளிட்ட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் நடைபாலம் வசதிகளுக்கான பணிகள் தொடங்குகின்றன.
எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில் இனி சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். புதுடெல்லியில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த கிராண்ட் டிரங்க் ரயில் இனி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். தொடர்ச்சியாக, எழும்பூர் மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

எழும்பூர் – மன்னார்குடி இடையே இயக்கப்படும் மன்னார்குடி ரயில் (16179 – 16180) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.22 மணிக்குப் புறப்படும். மன்னார்குடியில் இருந்து புறப்படும் தாம்பரத்திற்கு வரும் ரயில் காலை 5.57 மணிக்கு வந்து சேரும். தேஜஸ் விரைவு ரயில் (22671 – 22672) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்குப் புறப்படும். இதேபோல், இரவு 9.25 மணிக்கு வந்து சேரும். எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்படும் குருவாயூர் ரயில் (16107 – 16108) ஜூன் 20 முதல் ஆக.18 வரை தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்குப் புறப்படும். இதனால், குருவாயூரில் இருந்து புறப்படும் ரயில் தாம்பரத்தில் இரவு 9.15 மணிக்கு வந்து சேரும். எழும்பூர் – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும். திருச்செந்தூர் ரயில் (20605 – 20606) ஜூன் 18-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்குப் புறப்படும். மறு மார்க்கமாக தாம்பரத்திற்கு காலை 10 மணிக்கு வந்து சேரும்.
எழும்பூர் – கொல்லம் (16101-16102) இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை தாம்பரத்திலிருந்து காலை 5.27 மணிக்குப் புறப்பட்டு மறுமார்க்கமாக தாம்பரத்திற்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்தடையும். எழும்பூர் – கொல்லம் (16101-16102) இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை தாம்பரத்திலிருந்து காலை 5.27 மணிக்குப் புறப்பட்டு மறுமார்க்கமாக தாம்பரத்திற்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்தடையும். மதுரை – ராஜஸ்தான் மாறு பிகானிர் வாராந்திர விரைவு (22631) ஜூன் 26 முதல் ஆக.14 வரையும், மன்னார்குடி – ராஜஸ் -ஜோத்பூர் வாராந்திர விரைவு ஜூன் 23 முதல் ஆக.18 வரை எழும்பூருக்குப் பதிலாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாம்பரத்திற்கு மாறிய பிறகு, பயணிகள் நேரம் மற்றும் இடமாற்றங்களை கவனத்தில் எடுத்து பயண திட்டமிட தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.