விழுப்புரம் மத்திய மாவட்டம் கிழக்கு நகர திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் மற்றும் திராவிட மாடல அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நடந்த கூட்டத்திற்கு நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார் மாவட்ட முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் மற்றும் இதில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம் எல் ஏ சிறப்புரையாற்றி பேசியதாவது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சியை பாரதிய ஜனதாவிடம் விற்று விட்டார் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி கிடையாது எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி தற்போது பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது வியாபார ரீதியாக அதிமுகவை விற்று விட்டதற்கு ஈடாக உள்ளது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து வலிமைமிக்க ஆட்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் புரிந்து வருகிறார்
இதை பொதுமக்களிடம் நிர்வாகிகள் கொண்டு சேர்க்க வேண்டும் இது திமுக நிர்வாகிகள் கடமை