அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு விபத்திற்கு காரணமான வாகனத்தை கண்டுபிடித்து ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் பஇரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலக்குடி நான்கு வழி சாலையில் அடையாளம் தெரியாத வாகன மோதி அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் முகம் சிதைந்து உயிரிழந்தார். அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் விபத்து குறித்து அறிந்து உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்த அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த இளைஞர் சீர்காழி வட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆயங்குடிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் அரவிந்த் (28) என்பவரும் இவர் ஆசாரி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது . நேற்று இரவு சுமார் 1:30 மணி அளவில் தென்ன லக்குடியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.
விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த அரவிந்தின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக் கபட்ட நிலையில் உடலை வாங்க மறுத்து விபத்திற்கு காரணமான வாகனத்தை பிடித்து ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் என கூறி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சீர்காழி டிஎஸ்பி சரவணன் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் சப்-இன்ஸ்பெக்டர் வீரராகவன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்கள் சீர்காழி கச்சேரி சாலை பிரதான வீதிக்கு பேரணியாக வந்து அங்கும் சாலை மறியலில் ஈடுபட்டனர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மறியல் நடந்ததால் சீர்காழி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Exit mobile version