எடமணல் நுகர்பொருள் வாணிகழக கிடங்கில் சுமை பணி கைவிடக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

எடமணல் நுகர்பொருள் வாணிகழக கிடங்கில் சுமை பணியை தனியாருக்கு ஒப்பந்தம் செய்துள்ளதை கைவிடக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள எடமணல் கிடங்கில் கிடங்கு எண் 1 மற்றும் 2-ல் சுமை தூக்கும் பணியை தனியாருக்கு ஒப்பந்தம் செய்துள்ளதை கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஏஐடியூசி சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமன், மாவட்ட தலைவர் ராஜ்மோகன் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Exit mobile version