தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருக்கடையூர் பொறையார், அனந்தமங்கலம், தில்லையாடி, செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது கடந்த இரண்டு நாட்களாக தூரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது மிதமான மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மேலும் பல்வேறு பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேலும் மழை நீடித்தால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடையும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தரங்கம்பாடி & சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
By Satheesa

- Categories: News
- Tags: district newsraintamilnaduTharangambadi
Related Content
திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல்
By
Satheesa
January 15, 2026
பரதத்தில் யோகாவா...? பரதம் ஆடும் போதே யோகா செய்து அசத்திய சிறுமி
By
Satheesa
January 15, 2026
மேலமங்கநல்லூரில் நேற்றிரவு மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசாருக்கு கத்திக்குத்து
By
Satheesa
January 15, 2026
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி 49 நாட்களாக அன்னதானம் நிறைவு
By
Satheesa
January 15, 2026