வாஷிங்டன் : பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை அடுத்து, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தெரிவித்து உறுதியளித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பிறகு, இந்திய பார்லிமென்ட் எம்.பி.,க்கள் குழு ஐக்கிய நாடுகள் மற்றும் நட்பு நாடுகளில் நேரில் சென்று விளக்கம் அளித்து வருகிறது. அந்தக் குழு அமெரிக்காவிலும் செய்தி விளக்கங்களை வழங்கியது.
இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க பார்லிமென்ட் குழுவினரிடம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழுவினர் எடுத்துரைத்தனர். அதற்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் யோஷிதா சிங், “பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்பது குறித்து அமெரிக்காவின் உறுதியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிக்கையில், “எல்லை தாண்டி நிகழும் பயங்கரவாதத்தையும் அதன் அனைத்து வடிவங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் புரிந்து கொள்ளுகிறோம். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து முக்கியமான விவாதங்களும் நடைபெற்றன” என்றும் அவர் கூறினார்.