October 14, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“மக்கள் செய்த பிழை அதனை அனுபவிக்கிறோம்” – சீமான்

by Priscilla
August 16, 2025
in News
A A
0
“மக்கள் செய்த பிழை அதனை அனுபவிக்கிறோம்” – சீமான்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: “ஆட்சியாளரை குறை சொல்லி என்ன பயன்? அவரை அதிகாரத்தில் அமர வைத்தது மக்கள்தான். என் மக்கள் செய்த பிழைதான் இன்று நாமும் அனுபவிக்கிறோம்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், துப்புரவு பணியாளர்களின் பிரச்சினையை எடுத்து கூறினார்.

“உண்மையில் முதல்வரை சந்தித்தவர்கள் தொழிலாளர்களா? ஒரு தன்மானமிக்க தொழிலாளி முதலாளிகளுடன் சேர்ந்து நிற்பார்களா? மக்கள் உழைக்கும் பணியை கூலியாக முதலாளிகளுக்கு ஒப்படைத்து விட்டார்கள். அதிமுகக்கும் திமுகக்கும் மாற்றுக் கொள்கை இல்லை. அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களை பிரித்து கொடுத்தனர். மீதியை திமுக அரசு கொடுக்கிறது” என்றார்.

துப்புரவு பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதை சாடிய அவர்,
“ராம்கி போன்ற தனியார் நிறுவனங்களிடம் பணி ஒப்படைக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு காலை உணவு, காப்பீடு, நிவாரணம் என்று அறிவிக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் யார் பணத்தில்? அரசே தரும் பணத்தில் முதலாளிகள் நடுவில் நின்று லாபம் எடுப்பதே தவிர, தொழிலாளர்களுக்கு நேரடி நன்மை கிடைக்கவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.

மேலும்,
“5 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. மழைநீர் வடிகால், கழிவுநீர் மேலாண்மை எதுவும் சரியாக நடைபெறவில்லை. அப்படியிருக்க மாநகராட்சி, மேயர், கவுன்சிலர் எதற்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில் கல்வித் துறையை சுட்டிக்காட்டிய அவர்,
“நாட்டின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்க முடியாமல் 207 அரசு பள்ளிகளை மூடுகிறார்கள். பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது என அமைச்சர் காரணம் சொல்கிறார். ஆனால் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். அப்படியிருக்க அரசு பள்ளிகள் மட்டும் மூடப்படுவது எதற்காக?” எனக் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தை சாடிய சீமான்,
“மருத்துவம், கல்வி, போக்குவரத்து, மின் உற்பத்தி – அனைத்தையும் தனியார் தான் சிறப்பாகச் செய்ய முடியும் என்றால், அரசின் பங்கு என்ன? ஆட்சி நடத்தும் திறன் இல்லையென்றால், நீங்கள் கையாலாகாதவர்கள், தோற்றுப்போனவர்கள்” என்று விமர்சித்தார்.

இறுதியாக,
“ஆட்சியாளரை குறை சொல்லி பயன் இல்லை. அந்த ஆட்சியாளனை அதிகாரத்தில் அமர வைத்த மக்கள்தான் பொறுப்பு. என் மக்கள் செய்த பிழையை நாமே அனுபவிக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

Tags: chennaiChief Ministerdmkmk stalinntkprotestSanitation workersseemantamil nadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை : புதின் – டிரம்ப் சந்திப்பு

Next Post

சிவபுரியில் கொடூர விபத்து : கலைஞர்கள் உயிரிழப்பு, பலர் படுகாயம்

Related Posts

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !
News

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

October 14, 2025
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா
News

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

October 14, 2025
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
News

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

October 14, 2025
ஜேப்பியார் குழுமத்தின் தரமான செயல்..! மக்கள் பாராட்டு
News

ஜேப்பியார் குழுமத்தின் தரமான செயல்..! மக்கள் பாராட்டு

October 14, 2025
Next Post
சிவபுரியில் கொடூர விபத்து : கலைஞர்கள் உயிரிழப்பு, பலர் படுகாயம்

சிவபுரியில் கொடூர விபத்து : கலைஞர்கள் உயிரிழப்பு, பலர் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

October 14, 2025
மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !

மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !

October 14, 2025
“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

October 14, 2025
இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

October 14, 2025
டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

0
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

0
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

0
அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கணவர் உயிரிழப்பு

அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கணவர் உயிரிழப்பு

0
டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

October 14, 2025
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

October 14, 2025
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

October 14, 2025
ஜேப்பியார் குழுமத்தின் தரமான செயல்..! மக்கள் பாராட்டு

ஜேப்பியார் குழுமத்தின் தரமான செயல்..! மக்கள் பாராட்டு

October 14, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

October 14, 2025
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

October 14, 2025
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

October 14, 2025
ஜேப்பியார் குழுமத்தின் தரமான செயல்..! மக்கள் பாராட்டு

ஜேப்பியார் குழுமத்தின் தரமான செயல்..! மக்கள் பாராட்டு

October 14, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.