விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார் விழுப்புரம் MLA லட்சுமணன்

விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார் விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன்

விழுப்புரத்தில்
திராவிட பொங்கல் விழா ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி விளையாட்டு போட்டியை விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் லட்சுமணன் தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார்

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, மாணவர் அணி ஆகியவை சார்பில் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம், திராவிட பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள் விழுப்புரம் நகர அளவிலும் மற்றும் கோலியனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட ஒன்றிய அளவிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி விழுப்புரம் நகரில் இப்போட்டியின் தொடக்க விழா மாலை நடைபெற்றது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் கலந்து கொண்டு, ஆண்கள் பெண்களுக்கான கபடி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார் இதில் ஆண்களுக்கு கபடி, கைப்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயமும், பெண்களுக்கு கைப்பந்து, கபடி, ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளும் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் வருகிற 9-ந் தேதி வரை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர் வெற்றிவேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கபாலி, மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலாஜி, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகரமன்ற கவுன்சிலர்கள் புருஷோத்தமன், சாந்தராஜ், ஜெயந்தி மணிவண்ணன், வசந்தா அருளரசு மற்றும் நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
…….

Exit mobile version