விழுப்புரத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் புதிய தார் சாலைகளை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் நேரில் சென்று சாலையின் தரம் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம், எருமணத்தாங்கல், அனிச்சம் பாளையம், குச்சிபாளையம், ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் பல நாட்களாக சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால் நடந்து செல்ல முடியாமலும் தொடர் விபத்து ஏற்படுவதால் சாலை அமைத்து தரவேண்டுமென அப்பகுதி மக்கள் விழுப்புரம் சட்ட மன்ற உறுப்பினர் லக்ஷ்மணன் இடம் கோரிக்கை வைத்திருந்தனர்.அதனை தொடர்ந்து தற்போது தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தார் சாலை அமைக்கப்பட்டு வரும் இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மணன் நேரில் சென்று சாலையின் தரம் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

















