விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் காலை முதலே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு – கிராமங்களில் மேளதாளத்தோடு உற்சாகமாக வரவேற்ற மக்கள்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் எம் எல் ஏ, கண்டமங்கலம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குமளம் சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து இன்று காலை தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்பொழுது ஏராளமான கிராம மக்களும் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினறும் வேட்பாளர் லட்சுமணனுக்கு மேளதாளத்தோடு ராட்சதைய மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது வாக்கு சேகரித்து லட்சுமணன் பேசுகையில் இந்த கிராமத்தில் பெருமாள் கோவிலின் தேர்க்கு கூடாரம் அமைத்துக் கொடுத்துள்ளோம், தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கொடுக்கப்பட்டுள்ளது ,சாலை வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளன, என அந்த கிராமத்திற்கு செய்த திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் தற்போது ஆயிரம் ரூபாய் உரிமை வழங்கப்பட்டு வருகிறது. இது மீண்டும் திமுக ஆட்சி அமைந்து ரூ 2000 ஆக வழங்கப்படும் மேலும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காமல் நிதி நெருக்கடி கொடுத்த போதிலும் அதை எல்லாம் தாண்டி தான் தமிழக முதல்வர் உரிமைத்தொகை, நான் முதல்வன், உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்களை செய்து வருவதாக பட்டியலிட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அவருக்கு கிரேன் மூலம் ராட்சத ரோஜா மாலை அணிவித்து மேளதாளம் முழங்க வரவேற்றனர் இதனை தொடர்ந்து சீனிவாசபுரம், எல்.ஆர். பாளையம், முதலியார் குப்பம், கெங்கராம்பாளையம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்















