நீட் தேர்வு, மீனவர்கள் பிரச்சனை ஆகியவை குறித்தும் திமுக அரசின் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவை குறித்தும் விஜய் பேசினார். அதே வேளையில் நெல்லையில் நடந்த கவின் ஆணவப்படுகொலை குறித்து விஜய் வாய் ஏதும் திறக்கவில்லை. கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டபோது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
ஆனால் விஜய் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இதனால் மதுரை மாநாட்டில் இது குறித்து விஜய் பேசுவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், இங்கும் விஜய் பேசவில்லை.