வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று (12 ஆம் தேதி) முன்தினம் தொடங்கி வருகிற 19 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தீச்சட்டி, காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்
மேலும் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்களது குழந்தைகளை அழைத்து வந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் ராட்டினத்தில் ஏறுவதற்கான நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சாமானிய குடும்பத்தினர் தங்களது குழந்தைகளை ராட்டினத்தில் அழைத்து செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்
கடந்த முறை சிறிய அளவிலான ராட்டினத்திற்கு 100, மற்றும் பெரிய ராட்டினத்திற்கு 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நுழைவு கட்டணம் இந்த முறை ஆரம்பக் கட்டணமே 150 முதல் 200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் சாமானிய மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் இதனால் ராட்டினத்தில் செல்ல மக்கள் ஆர்வம் காட்டாததால் பல்வேறு ராட்டினங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது
கடந்தாண்டு ராட்டினம் அமைப்பதற்காக 3 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 2.44 கோடி ரூபாய்க்கு மட்டும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது இதனால் ராட்டினத்தின் நுழைவு கட்டணம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்
எனவே அறநிலையத்துறை நிர்வாகம் இதில் தலையிட்டு ராட்டினம் நுழைவு கட்டணத்தை குறைத்து லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்
