சட்டசபையில் உதயநிதி புதிய மசோதா தாக்கல்

சென்னை:
கடன் வசூலில் வலுக்கட்டாயம் மற்றும் தவறான முறைகளை தடுக்கும் நோக்கில், தமிழக சட்டசபையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த புதிய சட்ட முன்வடிவத்தை இன்று சட்டசபையில் வைத்தார்.

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
பொருளாதாரத்தில் பின்தங்கியோர், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கூலித் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் போன்றோர் அடிக்கடி கடன் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான ஆஃபர்களால் கடன் சுமையில் சிக்கி விடுகிறார்கள். கடன்தீர்க்க முடியாத நிலையில் கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கைகள் இவர்களை துன்புறுத்தும் நிலைக்கு கொண்டு செல்லுகிறது. சில நேரங்களில் இதுவே தற்கொலைக்கு தூண்டுதலாகவும் செயல்படுகிறது.

இதனை தடுக்க,

உதயநிதி தாக்கல் செய்த இந்த புதிய சட்ட முன்வடிவம், பொதுமக்களை வலுக்கட்டாய கடன் வசூல் முறையிலிருந்து பாதுகாப்பது நோக்கமாக அமைய இருப்பதாக தெரிகிறது.

Exit mobile version