தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் பெரிய கிரேன் மூலமாக மாலை அணிவித்து அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்குமாறு செயல்பட்ட திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
*திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருவாரூர் தியாகராஜர் கோவில் தெற்கு வீதியில் பரப்புரை மேற்கொண்டார் அப்பொழுது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரிய ஆபத்து விளைவிக்கும் வகையிலும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறை அனுமதி இல்லாமல் திருவாரூர் பனகல் சாலை தெற்கு வீதி சந்திப்பில் ராட்சத கிரேன் மூலமாக மிகப்பெரிய மாலையை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அணிவித்ததாக கூறி திருவாரூர் நகர காவல் துறையினர் தமிழக வெற்றி கழக திருவாரூர் மாவட்ட தலைவர் மதன் மற்றும் இரண்டு நிர்வாகிகள் மற்றும் பெரிய கிரேன் உரிமையாளர் ராஜேஷ் ஆகிய 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள்..
