சீர்காழியில் தவெக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல். ஜேசிபி மூலம் மலர்கள் தூவி பரிவட்டம் கட்டி உற்சாகமாக விசில் அடித்து வரவேற்பு அளித்த தவெகவினர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள சூழ்நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கோபிநாத் கட்சியினருடன் சட்டநாதபுரம் ரவுண்டானாவில் இருந்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தார். அப்பொழுது அங்கு ஜேசிபி இயந்திரம் மூலம் பூக்கள் கொட்டப்பட்டு பரிவட்டம் கட்டி விசில் அடித்து தவெக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்பொழுது திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய காலதாமதமானதால் தவெக வேட்பாளர் கோபிநாத் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து
ஒருமணிநேரம் காத்திருந்து சீர்காழி தனி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
