12,000 கிலோ பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள்

சத்தியமங்கலம், மே 20: சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் சம்பங்கி பூ மகசூல் இருமடங்காக அதிகரித்தது. இதனால் சந்தையில் விலை குறைந்ததுடன், விற்பனையில்லாத 12 டன் பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் அருகிலுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ள நிலையில், மலர்கள் தமிழகத்திற்கும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. வாசனை திரவிய உற்பத்தி நிறுவனங்களுக்கும் இப்பூக்கள் விற்கப்படுகின்றன.

வழக்கமாக கோடைகாலத்தில் 20-25 டன் பூக்கள் மட்டுமே களைக்கு வருவதைவிட, இப்போது மழை காரணமாக 50 டன் பூக்கள் வந்ததால், விலை ரூ.20 இருந்து ரூ.10-க்கு குறைந்தது.

அதிக உற்பத்தி காரணமாக விற்பனையாகாத 12 டன் சம்பங்கி பூக்கள், சத்தியமங்கலம் பெரியகுளம் பகுதியில் உள்ள குளக்கரையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இணைந்து கொட்டி அழித்தனர். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

வியாபாரிகள் மகேந்திரன், கணேசமூர்த்தி, பாபு ஆகியோர் கூறுகையில்: “மழை காரணமாக விளைச்சல் அதிகரித்தது. விற்பனை சுமாராக இருந்ததால், விவசாயிகளில் இருந்து ரூ.10-க்கு வாங்கிய பூக்களை கூட விற்க முடியவில்லை. பறிக்கும் கூலிக்கும் பணம் வரவில்லை. இதனால் விவசாயிகளும் நாங்களும் நஷ்டம் அடைந்தோம்” என்றனர்.

Exit mobile version