May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“தனிப்பட்ட விருப்பமல்ல; இது நீதிமன்ற உத்தரவு!” – திருப்பரங்குன்றம் மலை உச்சி தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி!

by sowmiarajan
March 7, 2026
in News
A A
0
“தனிப்பட்ட விருப்பமல்ல; இது நீதிமன்ற உத்தரவு!” – திருப்பரங்குன்றம் மலை உச்சி தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் மலை உச்சியில், தர்கா அருகேயுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ராம.ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு, தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு மற்றும் நீதிமன்றத்திற்கு இடையே காரசாரமான விவாதங்கள் அரங்கேறின.

முந்தைய விசாரணையின் போது, “நீதிமன்றம் பரிந்துரைக்கும் 5 நபர்களை மலை உச்சிக்குச் சென்று பூஜை செய்து வழிபட அனுமதிக்க வேண்டும்; இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று ஆஜரான அறநிலையத்துறை மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “நீதிமன்றம் கூறுவது முற்றிலும் புதிய நடைமுறையாக உள்ளது. மத ரீதியான பழக்கவழக்கங்களில் அறங்காவலர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது; அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளதால் போதிய கால அவகாசம் தேவை” என வாதிட்டார்.

தொடர்ந்து வாதிட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், “புதிதாக ஒரு வழக்கத்தை இபோது தொடங்குவதை ஏற்க முடியாது. மேலும், மனுதாரர்களில் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் இருப்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இதேபோல், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் தரப்பிலும் முடிவெடுக்கக் கால அவகாசம் கோரப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். “மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு. இதனை எனது தனிப்பட்ட விருப்பமாகவோ அல்லது உத்தரவாகவோ அரசு நினைக்க வேண்டாம். சட்டத்தின் முன்னிலையில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதுதான் சரியாக இருக்கும்” என அதிரடியாகத் தெரிவித்தார்.

மத நல்லிணக்கம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை முன்வைத்து அரசு தரப்பு அவகாசம் கோரியுள்ள நிலையில், நீதிமன்றம் தனது உத்தரவில் பிடியாக இருப்பதால் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மதுரையில் அதிகரித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது குறித்த பரபரப்பு நிலவுகிறது.

Tags: courtjudgeorderruling madrascourtSwaminathan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“2030-ல் தீராத தாகம்; இந்தியாவை எச்சரிக்கும் ஆய்வு!” – கோடையின் தொடக்கத்தில் உலகளாவிய தண்ணீர் நெருக்கடி அபாயம்!

Next Post

“அய்யா சிவ சிவ அரகரா!” – சாமித்தோப்பில் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமம்; குமரி மாவட்டத்தையே குலுக்கிய வைகுண்டர் அவதார தின விழா!

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
News

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
News

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
Next Post
“அய்யா சிவ சிவ அரகரா!” – சாமித்தோப்பில் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமம்; குமரி மாவட்டத்தையே குலுக்கிய வைகுண்டர் அவதார தின விழா!

"அய்யா சிவ சிவ அரகரா!" - சாமித்தோப்பில் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமம்; குமரி மாவட்டத்தையே குலுக்கிய வைகுண்டர் அவதார தின விழா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.