திண்டிவனம் கிடங்கல் 2ல் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை.
திண்டிவனம் கிடங்கல் 2ல் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்
சுயம்புவாக தோன்றியவர். மேலும் உற்சவர் வேறு எங்கும் காண முடியாத படி ஆறு திருக்கரங்களோடு, சங்கு, சக்கரம், வில், கெதை, வாள் என்று பஞ்ச ஆயுதங்களை தாங்கியும் காட்சியளிக்கிறார். மேலும் மார்பின் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி என இரு தாயாரும் எழுந்தருளியிருப்பது, திருவடியில் கருடன், ஆஞ்சநேயர் எழுந்தருளியிருப்பது, ஒரு கரத்தில் ஆதிசேஷனை பிடித்திருப்பது, மற்றொரு கரத்தில் வேதப்புத்தகத்தை வைத்திருப்பது என பல சிறப்புகளை உடையவராக காட்சியளிக்கிறார்.
இக்கோயிலில் பழந்தெய்வமான ஜ்யேஷ்டா தேவியும் எழுந்தருளியிருக்கிறார். இப்படி பல சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் தைமாத வெள்ளிக்கிழமை பஞ்சமி திதியுடன் கூடிய நாளான நேற்று உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் அதிகமான சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.இந் நிகழ்ச்சியை ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயில்ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்















