திருத்துறைப்பூண்டி முத்துமாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே
முத்துமாரியம்மன் ஆலய சித்திரை
தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழா கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று விரதம் இருந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி முத்துமாரியம்மன் வழிபட்டனர்
திமிதி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
மேலும் மே 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version