தந்தையை மீறிய தமையன் இருக்க கூடாது – மருத்துவர் ராமதாஸ்

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனதலைவர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கையில் இரண்டு ஆளுமைகளின் சமரச பேச்சு டிராவில் முடிந்துவிட்டது.

நான் துவங்கிய 34 அமைப்பின் பஞ்சயதுகரர்கள் ஒரே முடிவை தெரிவித்தனர் அவர்கள் அனைவரும் மாநாட்டிற்கு முன்பு அன்புமணிக்கு தலைவர் பதவியை தர தயாராக உள்ளேன் என தெரிவித்து நான் அனுப்பியவர்களை பார்க்க மறுத்தார்.

எல்லாம் எனக்கே வேணும் என எண்ணி என்னை கேட்டை சாதிகொண்டு உள்ளவே இருக்க வேண்டும் எண்ணுகிறார் நான் அப்படி இருக்கமாட்டேன். ஒவ்வொரு செங்கள்ளக பார்த்து பார்த்து கட்டிய பாட்டாளி மக்கள் கட்சியில் நான் குடியமைத்தவரை எதிராக செயல்படுகிறார்

நான் கூட்டிய மாவட்ட செயலாளர் கூட்ட்டதை பொய்யான தகவலை சொல்லி மாவட்ட செயலாளர்கள் பங்கேற்காத செய்தார் அன்புமணி, குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம் ஆனால் தந்தையை மீறிய தமையன் இருக்க கூடாது

உயிர் உள்ள என்ன உருவப்படம் ஆக்கி என்னை வைத்து சுற்று பயணம் மேற்கொள்ள போகிறாராம். ஆறு வருடங்களுக்கு முன்னாள் நாங்கள் தில்லியில் மோடியை சந்திக்க சென்ற போது விமானத்தில் அன்புமணி நான் தலைவர் ஆக விருப்பபடிகிரேன் என தெரிவித்தார் அப்போது நான் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டேன் அவருக்கு அப்போதே அன்புமணிக்கு அந்த ஆசை இருந்தது

என் குடும்பத்தை சார்ந்த பெண்கள் அரசியலில் வர கூடாது என நான் தெரிவித்தேன் இப்போது நடப்பது உங்களுக்கு தெரியும். இந்த தீர்வுக்கு ஒரு முடிவு இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த தேர்தல் முடிந்த பிறகு அவரிடம் தான் அனைத்தும் போக போகிறது

இந்த மோதல் போக்கில் பிஜேபி தலையீடு இல்லை, அவர் கட்சியை அவர் சரியாக வழிநடத்தவில்லை.கட்சி வலுவான இருந்தால் தான் கூட்டணியில் அதிக இடங்களை கேட்க முடியும் என்றேன் ஆனால் அவர் உழைப்பதற்கு தயாராக இல்லை

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் 5ஸ்டார் ஓட்டல் அல்லது 7 ஸ்டார் ஹோட்டலில் போதையில் மெதப்தாக கூறுகின்றனர் அவர் எங்கை இருக்கிறார் என தெரியவில்லை.

இந்த தேர்தல் முடிந்த பிறகு அவர் அனைத்தையும் வங்கி செல்லட்டும் அதுவரை நானே தலைவராக செயல்படுவேன்.முன்பு யாரையும் சந்திக்க மாட்டார் இப்போது பிரியாணி போட்டு கூவி கூவி தொலைபேசி நம்பர் குடுத்து அழைக்கிறார்

இந்த மோதல் போக்கில் காரணமாக அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மாட்டேன். பாமக சாதிகான கட்சி இல்லை, தமிழ்நாட்டில் உள்ள 324 சாதிகளுக்காக பாடுபடுபவன் இந்த இராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சியில் கூட்டணி வைக்க விரும்புபவர்களுக்கு யாரிடம் செல்ல வேண்டும் என்பது தெரியும். கூட்டணி குறித்து நானே முடிவெடுப்பேன். கட்சி தொண்டர்கள் எல்லாம் என் பக்கம்

காந்தி போல நான் முடிந்தவரை கோல் ஊன்றி சென்றாலும் இந்த ஊமை மக்களுக்காக நான் பாடுபடுவேன். என் உயிரிலும் மேலான தொண்டர்ககளை நான் உயிராக மதிக்கிறேன் என்று தெரிவித்தார்.

Exit mobile version