ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் சாலை அமைக்க முடியும் முடியும் என வனத்துறை அமைச்சர் கூறி இருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல்

அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் பேட்டி

கனிமவள கடத்தல் மட்டுமே நடப்பதாகவும் கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிக்கப்படுவாதவும் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பொங்கல் விழா மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் டாக்டர் கிளாடிஸ் லில்லி ஏற்பாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விதவிதமான வண்ணக் கோலங்கள் இட்டு பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தினர். தொடர்ந்து கோல போட்டி, வடம் இழுத்தல் போட்டி, ஆண், பெண்களுக்கான பலூன் ஊதி உடைத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

 செய்தியாளர்களை சந்தித்த 

மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் கூறியதாவது

2026 தேர்தலில் அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து அனுப்ப மக்கள் தயாராக இருப்பதாகவும் திமுக வை வீட்டிற்கு அனுப்பவும் தயாராக இருக்கிறார்கள் என்றும் தமிழகம் முழுவதும் போதை கலாச்சாரம் உள்ளது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாக உள்ளதாகவும் மாணவர்கள் கையில் கூட எளிதாக கஞ்சா அபின் போன்ற போதை பொருள் கிடைப்பதாகவும்
எங்கும் போதை கள்ள சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் திமுக ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை என்றும் கூறினார்.

 தேர்தல் நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைக்கப்படும், ரப்பர் சார்ந்த தொழில் சாலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது  வனத்துறை அமைச்சர் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் சாலை அமைக்க முடியும் என்று கூறி இருப்பது மக்களை ஏமாற்றும் செயல் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளது திமுக.

இது போன்று ஐடி பார்க் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் மட்டுமே நடந்ததாக பேட்டியின் போது அவர் தெரிவித்தார்.

பேட்டி

ஜெய சுதர்சன்
கன்னியாகுமரி
மேற்கு மாவட்ட செயலாளர்

Exit mobile version