விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள பெரிய ஏரி கடந்த சில தினங்களாக பேய்த கன மழை காரணமாக 70% நிரம்பியுள்ளன. இந்த ஏரி மூலம் விக்கிரவாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் 3400 ஏக்கர் பாசன வசதி பெறக்கூடிய பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியாகும்
ஏரியில் தற்போது ஆகாயத்தாமரை படிந்து காணப்பட்டுள்ளதால் இதனை அகற்ற வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா விவடம் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை (நீர்வளத் துறையின்) கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அந்த ஏரியினை பொதுப்பணித்துறை இரண்டு அதிநவீன ஜெ.சி.பி இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றும் பணியினை இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா தொடங்கி வைத்தார். தற்போது ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. கோரிக்கையை ஏற்று இதனை அகற்றி வருவதற்கு அப்பகுதி விவசாயிகள் சட்டமன்ற உறுப்பினருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்
