மயிலாடுதுறை சுதந்திரம் பெற்ற நாள் முதல் பேருந்து இல்லாததால் பொதுமக்கள் அவதி புதிய பேருந்துணை இயக்கி வரவேற்த்தனர்

மயிலாடுதுறை அருகே சுதந்திரம் பெற்ற நாள் முதல் பேருந்து இல்லாததால் பொதுமக்கள் மாணவ மாணவிகள் அவதி அடைந்த நிலையில் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துணை இயக்கிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.

மயிலாடு துறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் செம்பனார் கோயில், பரசலூர். இளையாளூர் அரங்க குடி வழியாக மயிலாடுதுறை செல்லும் புதிய பேருந்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். சுதந்திரம் பெற்ற நாள் முதல் இப்பகுதியில் பேருந்து வசதி இல்லை என அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். மாணவ மாணவிகள் பள்ளிக்கு நடந்தே செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. மினி பேருந்துகள் மட்டுமே இந்த கிராமங்களின் வழியாக சென்று வரும் நிலையில், அரசு பேருந்து வேண்டி பல முறை அப்பகுதி மக்கள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். கோர்க்கியற்ற பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பல ஆண்டு கால கோரிக்கையை இன்று நிறைவேற்றி வைத்தார். இந்த புதிய வழித்தடத்தில் பெருந்தை தானே இயக்கி சென்றார். அப்போது ஆங்காங்கே வழியெங்கும் கிராம மக்கள் வெடி வெடித்து மலர் தூவி பேருந்துக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இந்த புதிய பேருந்து சேவையால் மாணவ மாணவிகள் பேருந்தில் ஏரி தங்களது சந்தோஷத்தை உற்சாக ஒளியால் வரவேற்பளித்தனர். புதிய பேருந்து சேவையை இயக்கி தந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் ஆலத்தி எடுத்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

Exit mobile version