“தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் ” – இபிஎஸ்க்கு கனிமொழி பதிலடி !

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிமுக – திமுக இடையே சொற்கள் போர் தீவிரம்

சென்னை :

தொகுதி மறுவரையறை விவகாரம் தமிழக அரசியல் சூழ்நிலையை கொந்தளிக்கச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இன்னும் வராத ஒன்றை ‘புலி வருது, புலி வருது’ என்று பூச்சாண்டி காட்டும் வேலையைதான் ஸ்டாலின் செய்து வருகிறார்” என விமர்சித்தார்.

இந்த கருத்துக்கு பதிலளிக்க திமுக எம்.பி கனிமொழி அதிரடி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
தனிப்பட்ட அரசியல் பிழைக்காக சொந்த மாநில நலன்களை கைவிட்டு, டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவர் தங்களுக்கு போதிக்க உரிமை இல்லை.
எங்கள் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள்.
டெல்லி எஜமானர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் எடுபடாது.
நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், அரசமைப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை குரல் எழுப்புவோம்.
நீங்கள் விற்றுவிட்டீர்கள். நாங்கள் மாட்டோம்!”

என கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்து ,

“கமலாலயத்தில் குரலாக பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக எந்த எழுத்தோ, எந்த கருத்தோ அதிமுக சார்பில் பதிவு செய்யப்படவில்லை.
பாஜகவோடு கூட்டணி இல்லை என பேசி வந்த அதிமுக, தனது நிலைப்பாட்டை மாற்றி தற்போது மறுசீரமைப்பிலும் பாஜகவுக்கு வலு கொடுக்கிறது.”

என்று விமர்சித்துள்ளார்.

Exit mobile version