மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டிலுள்ள தர்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் ஹஜ்ரத் மஹ்சூம் சாஹிப் வலியுல்லாஹ் & ஹஜ்ரத் பக்கீர் மஸ்தான் வலியுல்லாஹ்உலகின் பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து சாதிமத பேதமின்றி அனைவரையும் அரவணைத்து அருளாசி வழங்கியதோடு, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளை தனது பார்வையால் குணமடைய செய்து வந்துள்ளார்கள். இறுதியாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பூதமங்கலம் வந்து தங்கிய அவர்கள் அங்கேயே அடக்கமானார்கள் .நாகூர் ஆண்டவர்களுடன் இவர்களும் பூதமங்கலத்திற்கு வந்து தங்கியுள்ளார் .பல்வேறு சிறப்புகளை கொண்ட இத்தர்க்காவின் புனித கந்தூரி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரத ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக வலம் வந்த சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை மீண்டும் மகான் அடக்கத் தலத்தை அடைந்து பின்னர் மகான் சமாதிகள் மீது சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இத்தகைய பெருமை மிக்க கந்தூரி விழா வானவேடிக்கை மேளங்கள் முழங்க மாடு , மயில் ஆட்டத்துடன் மாட்டு வண்டி ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு மகானை வழிபட்டனர்
