ஈரானின் அணு ஆயுத ஆலையை அழிக்க பங்கர் பஸ்டர் குண்டுகள் வேண்டுமென இஸ்ரேல் அமெரிக்காவிடம் கோரிக்கை !
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மிகப்பெரும் திருப்பத்தை எட்டவைக்கக்கூடிய நிலையில், இஸ்ரேல், ஈரானில் உள்ள அணுஆயுத உற்பத்தி மையத்தை அழிக்கப் பங்கர் பஸ்டர் வகை அதிவலிமை குண்டுகளை அமெரிக்காவிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்கர் பஸ்டர் குண்டு என்றால் என்ன ?
பொதுவாக குண்டுகள் பூமியின் மேற்பரப்பை தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும். ஆனால் சில நாடுகள் தங்கள் முக்கியமான ஆயுத ஆய்வகங்கள் மற்றும் உற்பத்தி மையங்களை மலையின்கீழ் அல்லது ஆழ பள்ளங்களில் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்துகின்றன. ஈரானின் ஃபர்தோ (Fordow) பகுதியில் அமைந்துள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
இவ்வாறான ஆழமான இலக்குகளை தாக்க, GBU-57 எனப்படும் பங்கர் பஸ்டர் வகை குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது சுமார் 30,000 பவுண்டுகள் (13,600 கிலோ) எடையுடன் 20 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு பூமியின் 200 அடி ஆழம் வரை ஊடுருவி, 60 அடி ஆழ காங்க்ரீட்டையும் எளிதாக தாக்கும் சக்தியைக் கொண்டது.
படைத்துறையின் பரிசோதனை மட்டுமே !
இதுவரை இந்த வகை குண்டுகள் யதார்த்த போரில் பயன்படுத்தப்படாமல், சோதனை முயற்சிகளிலேயே தான் காணப்பட்டுள்ளன. இதனைத் தூக்கிச் செல்ல B2 ஸ்பிரிட் ஸ்டெல்த் பாம்பர் என்ற விமானம் தேவைப்படுகிறது. அமெரிக்கா தான் உலகில் இந்த வகை விமானத்தை வைத்திருக்கும் ஒரே நாடாகும்.
போர் பயிற்சி இல்லை – நேரடி ரணாங்கண சோதனை ?
இஸ்ரேலுக்காக இக்குண்டுகளை அமெரிக்கா வழங்குவதன் மூலம், பங்கர் பஸ்டர்களும் B2 பாம்பரும் முதன்முறையாக நேரடி போரில் சோதிக்கப்படுமா என்பது தற்போது சர்வதேச அரசியல் வட்டங்களில் முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது.