திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் காணொலி வாயிலாக திறந்த வைத்தார்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தையும், திருத்தணி நகரத்தில் ரூ.20.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தையும், திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி மேல் நிலைப்பள்ளி கட்டிடத்தையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். திருவள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலை ஐ.சி.எம்.ஆர் அருகே வேடங்கிநல்லுார் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில், 5.58 ஏக்கர் நிலப்பரப்பில் பரப்பளவில், ரூ.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் 56 பேருந்துகள் நிறுத்தும் வசதிகள், உணவகங்கள் உள்ளிட்ட 10 கடைகள், பாலுாட்டும் அறை, நிர்வாக அறை, ஏ.டி.எம், காவலர் அறை, வாகனங்கள் நிறுத்தம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளூர் பழைய பேருந்து நிலையங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் இன்று முதல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளதால் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கொண்டஞ்சேரி ரமேஷ், தா.மோதிலால், கூளூர் ராஜேந்திரன், எஸ். மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Exit mobile version