திருவள்ளூரில் ரூ.4.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

திருவள்ளூரில் ரூ.4.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி இனிப்பு வழங்கி தொடங்கி வைத்தனர்

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகராட்சி ராஜாஜி சாலையில் உள்ள பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் . அரசு பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில் இங்கே போதிய இட வசதி இல்லாததால் கூடுதலாக மாணவர்கள் சேர்க்க முடியாத நிலை இருந்து வந்தது. மேலும் 1-ஆம் வகுப்பு முதல் +2 வரை மாணவ மாணவிகள் பயந்து வரும் இந்த பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தாமல் உள்ள சூழ்நிலை இருந்து வந்தது.
இதனால் கூடுதல் கட்டிடம் கட்ட பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டது. இதை அடுத்து புதிய பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாததால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே இருந்த 51 சென்ட் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வருவாய்த்துறையினர் சமீபத்தில் அதிரடியாக மீட்டனர். இதனையடுத்து அரசு பள்ளி கட்டிடத்தை 51 சென்ட் இடத்தில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 51 ரூ.4.6 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி பணிகள் நிறைவு பெற்றதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக இன்று பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனை அடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி திறந்து வைத்தனர். இதில் திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் தாமோதரன் திருவள்ளூர் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version