திருவாரூர் 108 திவ்ய தேசங்களில் பதினாறாவது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் தேர் திருவிழா

திருவாரூர் அருகே 108 திவ்ய தேசங்களில் பதினாறாவது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் திருத்தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் பதினாறாவது திவ்ய தேசமாக அமைந்துள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக இன்று சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இரண்டாம் ஆண்டு தேர்த் திருவிழா விமரிசையாக தொடங்கியது.
தேரின் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கம் எழுப்பி உற்சாகமாக தேரை இழுத்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் குடவாசல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version