மயிலாடுதுறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கம் காலைவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

மயிலாடுதுறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக இன்று முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 18 அம்ச கோர்க்கையை வலியுறுத்தி
வட்டாரதலைவர் கோவிந்தாராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோரிக்கைகளை முழக்கமிட்டனர். இந்த காலை வரையற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் என்றும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்திட வேண்டியும், ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்கிடவும் உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Exit mobile version