தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

பழமையான தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார், நான்கு இடங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க இடம் வழங்க அமைச்சர் கோரிக்கை, உடனடியாக இடத்தை ஒதுக்கீடு செய்து ஆதீன மடாதிபதி நடவடிக்கை :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சரும், மயிலாடுதுறை மாவட்டம் பொறுப்பு அமைச்சருமான வெங்கடரமணன் இரண்டாவது நாளாக பல்வேறு ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறார். மயிலாடுதுறை அருகே புகழ் பெற்ற பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன மடத்திற்கு அமைச்சர் வருகை தந்து, ஆதியில 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அமைச்சருக்கு ஆதீனம் சார்பில் வைத்தீஸ்வரன் கோயில் ஆலய பிரசாதம் மற்றும் நினைவு பரிசுகள் ஆகியவற்றை மடாதிபதி வழங்கினார். தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்க வேண்டும் என்று ஆதீன மடாதிபதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து மடாதிபதியிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர், மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதை தடுப்பதற்காக மாவட்டத்தில் நான்கு இடங்களில் சேமிப்பு கிடக்கு அமைப்பதற்கு தகுந்த இடம் தேவைப்படுவதாக தெரிவித்து அதனை ஆதீனம் சார்பில் வழங்க வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆதீன மடாதிபதி, வைத்தீஸ்வரன்கோயில், ஆலவெளி , குளிச்சார், உள்ளிட்ட நான்கு இடங்களில் தருமபுரம் ஆதீனத்தில் சொந்தமான இடத்தை, நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு வழங்க ஆதீன மடாதிபதி அனுமதி அளித்தார். தொடர்ந்து ஆதீனத்திற்கு சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் டயாலிசிஸ் சென்டர் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.

Exit mobile version