தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச் சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள், ஜால்ராக்களை அழைத்து பேசுவதால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது – தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் தேர்தல் மைதானத்தில் நடைபெற்றது தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் மு பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெல்லி பஞ்சாப் ராஜஸ்தான் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பழைய ஓய்வு திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும் டாஸ்மார்க் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும் காலி பாட்டில் பெரும் திட்டத்தினில் டாஸ்மார்க் பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
கு.பாலசுப்ரமணியன், (சிறப்புத் தலைவர், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்.)
”தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் போராட்டம் என்பது தேர்தல்கால போராட்டம் அல்ல. 15 ஆண்டு காலமாக ஆண்டுக்கு பலமுறை போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். தேர்தல் நேரத்தில் மட்டும் போராடும் சில சங்கங்கள் இருக்கின்றன, அவர்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் உண்டு.
இரண்டாவதாக, பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) போய் இரண்டாவது புதிய ஓய்வூதியத் திட்டம் வந்தது. பிறகு மூன்றாவது ஒரு புதிய ஓய்வூதியத் திட்டம் வந்தது. இப்போது நான்காவதாக ஒரு ‘உறுதியளிப்பு’ திட்டம் வந்திருக்கிறது. இந்த நான்கு ஓய்வூதியத் திட்டங்களில் முதலாவதாக இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம்தான் சிறந்தது. மற்ற மூன்று திட்டங்களும் மோசமானவை. இரண்டாவது வந்த திட்டம் மூன்றாவதை விடப் பரவாயில்லை, மூன்றாவது இன்னும் மோசம். நான்காவதாகத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருப்பது, எங்களிடமே 10% பணத்தைப் பிடித்துக் கொண்டு அதிலிருந்து ஓய்வூதியம் தருவது என்பது LIC போன்ற எந்த நிறுவனமும் செய்யக்கூடியதுதான். எனவே இந்த மூன்று ஓய்வூதியத் திட்டங்களையும் நாங்கள் கறாராக எதிர்க்கிறோம், எங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே (OPS) வேண்டும்.
ஓய்வூதியமே இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கேட்கிறோம், ஆனால் இந்த அரசு அதைப் பற்றி கவலைப்படவில்லை. எதைச் செய்தால் ஓட்டு கிடைக்கும் என்று நாள்தோறும் ஆராய்ச்சி செய்து வாக்கு வங்கி அரசியலுக்காகத் திட்டங்களை அறிவிக்கிறார்களே ஒழிய, உழைப்பவர்களுக்கான திட்டங்களை அவர்கள் அறிவிக்கவே இல்லை. இவர்களுடைய திட்டங்களால் உழைப்பவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். உழைப்பவர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதமும், பணி நிரந்தரமும் கேட்கிறோம். தூய்மைப் பணி நிரந்தரமானது, குடிமைப் பணி நிரந்தரமானது, குடிநீர்த் திட்டங்கள் நிரந்தரமானது, ஆனால் அந்தப் பணியாளர்களை மட்டும் நிரந்தரம் செய்ய மறுக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பொதுத்துறை மற்றும் அரசுத் துறை பணியாளர்கள் 10 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று சொன்னார்கள். ஆனால் இன்று வரை அதை நிறைவேற்றவில்லை, போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
போராடுபவர்களை அழைத்து பேசுகிறேன் என்று ஒரு பொய்யை மாண்புமிகு முதலமைச்சர் சொல்கிறார். முதலமைச்சர் அவர்களே, அதிமுக காலத்திலும் போராடினோம் அவர்களும் அழைக்கவில்லை, திமுக காலத்திலும் 5 ஆண்டுகளாகப் போராடுகிறோம் நீங்களும் அழைக்கவில்லை. உங்களுக்கு வேண்டியவர்களை வரவழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே ஒழிய, உண்மையாகப் போராடுபவர்களை அழைத்து பேசும் பழக்கம் உங்களுக்குக் கிடையாது, நீங்கள் பொய் சொல்கிறீர்கள். சந்திக்க வேண்டும் என்று மூன்று முறை கடிதம் கொடுத்திருக்கிறோம், ஆனால் எங்களைச் சந்திக்கவே இல்லை.
யாரைச் சந்திக்கவில்லை? ஆட்சி மாற்றத்திற்காகப் போராடிய அரசு பணியாளர் சங்கத்தை நீங்கள் அழைக்கவில்லை. ‘ஜால்ரா’ போடுபவர்களை அழைத்து பேசினால் இனிப்பு கொடுப்பார்கள், நீங்கள் எதைச் சொன்னாலும் பாராட்டுவார்கள். நீங்கள் எதைச் சொன்னாலும் அதில் உள்ள நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லக்கூடிய ஒரே சங்கம் அரசு பணியாளர் சங்கம்தான். எனவே தொகுப்பூதியம் மற்றும் மதிப்ப்பூதியம் பெறுபவர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் நியமித்த சாலைப் பணியாளர்களை அதிமுக அரசு 41 மாதங்கள் பணியில் வைக்காமல் வெளியே வைத்திருந்தது…

















