தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் & உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு அம்சக் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்:-

மயிலாடுதுறையில் சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களை, செல்போனில் இ-கேஒய்சி, ஓடிபி எஃப்.ஆர்.எஸ் முறையில் தரவுகளை சேகரிக்க கட்டாயப்படுத்தப்படுவதை கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகள் ஆகியோருக்கு இணை உணவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ பதிவு செய்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்ற முறையை பின்பற்றுவதால், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு முன் பருவக் கல்வி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பணிகளை செய்வதற்கு செல்போன் வழங்கப்படாததால் தரவுகளை அளிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மையப் பணிகளை செய்வதற்கு 5g செல்போன், சிம் கார்டு, வைஃபை இணைப்பு வழங்கிட வேண்டும், பயனாளிக்கு சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ முடியை கைவிட வேண்டும், இ-கேஒய்சி, ஆதார் எண் ஓடிபி மற்றும் எஃப்.ஆர்.எஸ் முறையை முற்றினமாக கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Exit mobile version