10-ம் வகுப்பு & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து ஆசிரியர்களிடம் ஆசிர்வாத திருநாள்

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெறும் ஆசிர்வாத திருநாள், மயிலாடுதுறை அருகே குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது:-

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் பொது தேர்வுக்கு முன்னதாக மாதா பிதா குரு தெய்வம் ஆகியோர் ஆசிர்வாதங்களை பெறும் வகையில் இன்று ஆசீர்வாத திருநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பள்ளியை விளையாட்டு மைதானத்தில் பாத பூஜை செய்தனர். திருக்கடையூர் ஆலய குருக்கள் மகேஷ் சுவாமிபூஜைகளை செய்து வைத்தார் தொடர்ந்து, குருக்கள் மந்திரங்களை சொல்லச் சொல்ல மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாதங்களில் மலர்களை சமர்ப்பித்து பூஜையை மேற்கொண்டனர். அதனை எடுத்து வரிசையாக நின்று அனைத்து ஆசிரியர்களிடமும் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு தெய்வத்திற்கு மரியாதை செலுத்தினர். மாணவ மாணவிகளுக்கு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை தர்மபுர ஆதின மடாதிபதி குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமார்த்த சுவாமிகள் வழங்கினார் . அப்போது பாத பூஜை செய்த மாணவர்களை பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்தனர். பள்ளியின் செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் தலைமை ஆசிரியர் வேலுசாமி மற்றும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Exit mobile version