திருக்களாச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள்  கோவில் 70ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே திருக்களாச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் 70ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பெருமாள் வேண்டுவொருக்கு வேண்டும் வரம் தரும் எம்பெருமானார் விளங்குகிறார். இக்கோயில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, பாலாலயம் செய்யப்பட்டு பழமை மாறாமல் திருப்பணிகள் தொடங்கி நிறைவு பெற்ற நிலையில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவில்களின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டன. கடந்த 18 ஆம் தேதி ஹோமத்துடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று மூன்றாவது கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க, பட்டாச்சாரியர்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோவில்களை சுற்றி வலம் வந்து கோபுர கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு புனித நீர் ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Exit mobile version