மலைகளின்இளவரசியில்மலர்வசந்தம்: சுற்றுலாப்பயணிகளைச்சுண்டிஇழுக்கும்பிரையன்ட்பூங்கா!

திண்டுக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில், இதமான காலநிலையை அனுபவிக்கத் தமிழகம் மட்டுமின்றிப் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடங்கவுள்ள கோடை சீசனை முன்னிட்டு, நகரின் பிரதான ஈர்ப்பான பிரையன்ட் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சீசனுக்காகப் பூங்காவில் பல்வேறு வண்ணங்களைக் கொண்ட புதிய மலர் நாற்றுகள் நடப்பட்டு, தற்போது அவை கண்கவர் வகையில் பூத்துக் குலுங்குகின்றன. இளவேனிற்காலம் தொடங்கும் முன்பே பூங்கா முழுவதும் பரவியுள்ள இந்த வண்ண மலர்கள், இயற்கை ஆர்வலர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்துள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பூத்துக் குலுங்கும் மலர்களை வியப்புடன் ரசிப்பதோடு, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து குழுவாகப் புகைப்படம் எடுத்துத் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றனர். சர்வதேசத் தரம் வாய்ந்த மலர் கண்காட்சிக்கான பணிகளும் ஒருபுறம் தீவிரமடைந்து வருவதால், வரும் வாரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version