சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம் தருமை ஆதீனம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் தோணியப்பர் சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரத்தில் முதல் தோடுடைய செவியன் என்ற பதிகத்தை அருளிய இக்கோவிலின் சித்திரை பெருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான ஸ்ரீ முத்துசட்டை நாதர் உற்சவம் இன்று நடைபெற்றது. முன்னதாக முத்து சட்டநாதர் வசந்த மண்டபம் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூர்ணாகதி மகா தீபாராதனைக்கு பின்புனித கடங்கள் புறப்பாடாகி முத்து சட்டநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
