தகை சால் தமிழர் நல்லகண்ணு மறைவை முன்னிட்டு திருவாரூரில் அனைத்து கட்சி சார்பாக மௌன அஞ்சலி ஊர்வலம்

தகை சால் தமிழர் நல்லகண்ணு மறைவை முன்னிட்டு திருவாரூரில் அனைத்து கட்சி சார்பாக நடைபெற்ற மௌன அஞ்சலி ஊர்வலம்..

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான தகை சார் தமிழர் நல்லகண்ணு பிப்ரவரி 25 ஆம் தேதி சென்னையில் உடல் வயது மூப்பின் காரணமாக தனது 101 வது வயதில் காலமானார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றும் பொதுவுடமை அமைப்புகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்று திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து மௌன அஞ்சலி ஊர்வலம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

மௌன அஞ்சலி ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் பேரியக்கம், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, வளரும் தமிழகம் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையம் வழியாக பனகல் சாலை கீழ வீதி வழியே நகராட்சி அலுவலகம் வரை மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது.

பேரணியைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகள் புகழஞ்சலி உரையாற்றினர் பின்னர் மௌன அஞ்சலி செலுத்தி தகை சால் தமிழர் நல்லகண்ணு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்..

Exit mobile version