இந்திய கிரிக்கெட் குழு அடுத்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்வது இந்திய தேர்வுக் குழுவுக்கு பெரும் சவாலாக அமைந்தது.
கில் தலைமையில் புதிய தலைமுறை…
நீண்ட பரிசீலனையிற்குப் பிறகு, இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். இது இந்திய டெஸ்ட் அணிக்குள் புதிய தலைமுறை உருவாகும் சூழலை உருவாக்கியுள்ளது. IPL 2025 தொடரில் சிறப்பாக விளையாடி வந்த சாய் சுதர்சன், தனது முதல் டெஸ்ட் தேர்வை பெற்றுள்ளார். அவருடன் அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் உள்ளிட்ட அணிகளும் இடம் பெற்றுள்ளனர்.
முக்கிய வீரர்கள் விலகல் :
முகமது ஷமி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தத் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர் இதுகுறித்து விளக்கமளித்தபோது, “கேப்டன் தேர்வானது ஒரு தொடருக்கானது அல்ல; எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் ஷுப்மன் கில் வளர்ச்சி பெரும் அளவில் காணப்பட்டுள்ளது. அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது,” என தெரிவித்தார்.
அணியிலிருந்து வெளியே :
“முகமது ஷமி உடல் நலக் குறை காரணமாக இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. அவரின் பங்களிப்பு முக்கியமானதென எங்களுக்கும் தெரியும். ஆனால், முழுமையான உடல் தகுதி இல்லாததால் அவரைத் தேர்வு செய்ய முடியவில்லை,” என்றார் அகார்கர்.
இந்திய அணி விவரம் :
கேப்டன் : ஷுப்மன் கில், துணை கேப்டன்: ரிஷப் பண்ட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்