செல்லும் இடமெல்லாம் கழகமும் தோழமைக் கட்சிகளும் சிறப்பாக இருக்கிறது என்கிற நல்ல செய்தியை சொல்லி இருக்கிறார்கள். எனவே மீண்டும் கழகம் வெற்றி பெற்று, தளபதி இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பு ஏற்பார் என திருவாரூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக முதன்மை செயலாளர் கே என் நேரு உற்சாக உரை..
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண அரங்கில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து திமுக, காங்கிரஸ், திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், எஸ்டிபிஐ, தேமுதிக, மக்கள் நீதி மையம், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, வீசிக, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக முதன்மை செயலாளரும், திருச்சி மண்டல தேர்தல் மேலிட பொறுப்பாளருமான கே என் நேரு கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது..
எல்லா பகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழகமும், கூட்டணி கட்சித் தலைவர்களும் மிக இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர். மனதில் பட்டதை தைரியமாக பேசக் கூடியவர் நம்முடைய வேட்பாளர் கலைவாணன். தனக்கு செலவுக்கு தந்த பணத்தை, தன்னை நம்பி வந்தவருக்கு கொடுத்துவிட்டு செலவு செய்யாமல் வெற்றி பெற்றவர் நம்முடைய கலைவாணன். அதுதான் இவருடைய சிறப்பு. திருவிடைமருதூர் ராமலிங்கம் என்பவர் தலைவர் கலைஞரிடம் சென்று கோசி மணியை கும்பகோணத்தில் நிற்க வைக்க வேண்டாம், திருவிடைமருதூர் பகுதியில் நிற்க வையுங்கள். நாங்கள் பெற்று பெற வைக்கிறோம் என தலைவரிடம் திருவிடைமருதூர் ராமலிங்கம் கூறினார். அதேபோல வேட்பாளர்கள் யாரும் இவ்வாறு இருக்க முடியாது. எனக்கு வேண்டாம் அவருக்கு கொடுங்கள் என்று யாரும் கூற மாட்டார்கள். ஆனால் கலைவாணன் தனக்கு செலவுக்கு தந்த பணத்தை, தன்னை நம்பி வந்த வேட்பாளருக்கு தந்துவிட்டு, உங்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நல்ல சட்டமன்ற உறுப்பினர். இதுதான் இவரது சிறப்பு. இந்த தொகுதி மக்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவர், மனதில் பட்டதை கருத்தாக சொல்லக்கூடியவர். தலைவர் கலைஞருடன் நாங்கள் அனைவரும் நிற்கும்போது, அங்கு கலைவாணன் வருவார். அப்போது தலைவர் கலைஞர், மாவட்ட செயலாளர் வருகிறார் நான் பேசுகிறேன். சற்று தள்ளி நில்லுங்கள் என்று கூறி கலைவாணிடம் கலைஞர் பேசுவார். அப்போது நான் கேட்பேன், நாங்களும் மாவட்ட செயலாளர் தான் என்று, உடனடியாக கலைஞர் நீ திருச்சி மாவட்டத்திற்கு செயலாளர், எனக்கு மாவட்ட செயலாளர் கலைவாணன் தான் என்பார்.
கலைஞர் மிக மிக அன்பாக கலைவாணை தான் வைத்திருந்தார். அப்படிப்பட்ட கலைவாணனை வேட்பாளராக தளபதி அறிவித்திருக்கிறார். உங்களுடைய பெருவாரியான ஆதரவை நல்கி அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். இன்று காலையில் கிளம்பி அரியலூர், பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம் சென்று தற்போது திருவாரூர் வந்திருக்கிறேன். இனி கும்பகோணம், தஞ்சாவூர் செல்ல இருக்கிறேன். ஒரே நாளில் 41 தொகுதியை பார்க்க வேண்டிய நிலை உள்ளது. செல்லும் இடமெல்லாம் கழகமும் தோழமைக் கட்சிகளும் சிறப்பாக இருக்கிறது என்கிற நல்ல செய்தியை சொல்லி இருக்கிறார்கள். எனவே மீண்டும் கழகம் வெற்றி பெற்று, தளபதி இரண்டாவது முறையாக பொறுப்பு ஏற்பார். கலைவாணனுக்கு உங்களை ஆதரவை தாருங்கள் என்றார்.
