100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை,ஒப்படைக்கும் போராட்டம் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கூறியுள்ளனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞர் நகர்வாசிகள் வீட்டு மனைபட்டா கேட்டு குடும்ப அட்டை வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.தமிழக அரசு தமிழகம் முழுவதும் பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி வரும் நிலையில் கலைஞர் நகரில் 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினருக்கு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை.இதனை கண்டித்தும், வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் கலைஞர் நகரில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது வீட்டு குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.
