பரசலூரில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி முகாமில் தமிழர்களின் மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் கண்காட்சியில் பங்கேற்ற இயற்கை விவசாயிகள் பூமியை காப்பாற்றுகின்ற அறிவியல் தமிழர்களின் வேளாண்மையில் உள்ளதை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் காரைக்கால் மாவட்டம் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் பங்கேற்றனர். நவீன ரக நெல் தற்போது பரிந்துரைக்கப்படுகின்ற நிலையில் பாரம்பரிய நெல் ரகங்களின் மகத்துவம் குறித்தும் அதன் பயன்களை விவசாயிகளுக்கு விளக்கும் வகையில் மாணவர்கள் நடத்திய முகாமில் கருப்புகவுனி, நாட்டுபாசுமதி,, நாட்டு வெள்ளை பொன்னி, குள்ளக்கார், சிவன்சம்பா, ரத்தசாலி, கிச்சிலிசம்பா, சிவப்புகவுளி, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நெல் ரகங்களையும், விதைகளையும்,காட்சிப்படுத்தியிருந்தது விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழர் வேளாண்மை தமிழர் மருத்துவம் இயற்கை விவசாயி ஞானப்பிரகாசம் வரண்ட பூமியில் வரப்பை உயர்த்தி மேககூட்டங்களை உருவாக்கி நெல்லை விளைவிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
நீரை உருவாக்குவதில் துவங்குகிறது வேளாண்மை என்றும், தன்னாளேயே எல்லாவற்றையும் உருவாக்க முடியும் என்பதுதான் தமிழர்களின் வேளாண்மை. தண்ணீர் இல்லாத வரண்ட பூமியில் வரப்பை உயர்த்தி தேக்கி நிறுத்தி நெல்லை விளைவித்தவர் நெல்லையப்பன் என்று சுட்டிகாட்டிய இயற்கை விவசாயி ஞானப்பிரகாசம் கண்காட்சியில் காட்சிபடுத்தியிருந்த நெல்ரகங்களின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் விளக்கி கூறினார். உணவே மருந்து மருந்தே உணவு என்ற சொல் தமிழில் மட்டுமே உள்ளது. தமிழர்களின் வேளாண்மையை தமிழக அரசு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதற்கான அடிப்படை ஆய்வை தொடங்க வேண்டும் என்றும் தண்ணீர் இல்லாத ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 ஏக்கரில் நெல்லை விளைவித்து மழை பொழிவை உண்டாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.இதில் இயற்கை விவசாயிகள் ஏராளமானோர் கலந்த கொண்டனர்.
















