தமிழக அரசு தொழிலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென மயிலாடுதுறையில் நடைபெற்ற தென்னிந்திய குளிர்சாதன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது :-
மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்னிந்திய குளிர்சாதன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் பிரேம்குமார் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சங்க கொடி ஏற்றப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு பதவியேற்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து மறைந்த நல்லகண்ணு ஐயாவிற்கு இக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் தொழிலாளர்களுக்கு இன்றைய விலைவாசிக்கு ஏற்றார்போல் அரசு ஊதியம் நிர்ணயம் செய்து தொழில் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் , அனைத்து மாவட்டங்களிலும் புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.














