குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி வாக்குச்சாவடி பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் தனியார் அரங்கத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் எம்.டி.மணிமேகலா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு அலுவலர்கள் அல்லது ஊழியர்களாக மாற்றம் செய்து வரைமுறை செய்த ஊதியம் வழங்க வேண்டும். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9600 வழங்க வேண்டும். ஓய்வு பெறும் பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியர்கள் ரூ.10 லட்சம் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கும் என்ற நீதிமன்ற உத்தரவவை அமல்படுத்த வேண்டும். வீடில்லாதவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் இலவச வீடு வழங்க வேண்டும். குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை அந்த பணியிலிருந்து விடுவிக்க உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் நிர்வாகிகள் காந்திமதிநாதன், ராஜேந்திரன், இளங்கோவன் மற்றும் வட்டார நிர்வாகிகள் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

















